தமிழகத்தில் தளர்வுகற்ற ஊரடங்கு ஜூன் 7ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் தொற்றின் தாக்கம் குறைய ஆரம்பித்தது. எனவே ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு மருத்துவ நிபுணர்கள் குழு ஆலோசனை வழங்கி இருந்தது. அதனைத் தொடர்ந்து சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும், இந்த முழு ஊரடங்கு 7-6-2021 முதல் 14-6-2021 காலை 6-00 மணி வரை, சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளேன். இந்த ஊரடங்கின் போது, அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அனுமதிக்கப்படும். செயல்பாடுகள் தொடர்ந்து
தமிழ் நாட்டில் தற்போது கொரோனா நோய்த் தொற்று பரவலாக பல மாவட்டங்களில் கட்டுக்குள் வந்துள்ள போதிலும் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மட்டும் நோய்த் தொற்றுப் பரவல் தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகிறது.
எனவே, இம்மாவட்டங்களில் நோய்த்தொற்று வகையிலும் அதே பரவலைக் சமயம் கட்டுக்குள் கொண்டுவரும் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் தற்போது ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன், மேற்காணும் 11 மாவட்டங்களில் கீழ்க்கண்ட அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அளிக்கப்படுகிறது.
- தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள். காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
- காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
- மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். மீன் சந்தைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திறந்த வெளியில் இந்த சந்தைகளை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிருவாகங்கள் உடனடியாக செய்ய வேண்டும்.
- இறைச்சிக் கூடங்களில் (Slaughter houses) மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.
- அனைத்து அரசு அலுவலகங்களும், 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
- சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவிகிதம் டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு. பத்திரப் பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.
- தீப்பெட்டி தொழிற்சாலைகள் பணியாளர்களுடன் நடைமுறைகளைப் அனுமதிக்கப்படும். நிலையான பின்பற்றி 50 சதவிகிதம் வழிகாட்டு செயல்பட அனுமதி என தமிழக அரசு தெரிவித்துள்ளது.