ஐக்கிய அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக டோனி தலைமையிலான இந்திய அணி அங்கு சென்றுள்ளது. அங்கு சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருக்கு துரதிஷ்டவசமாக கொரோனா தொற்று ஏற்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா திடீரென ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகி தாயகம் திரும்பினார்.
இதற்கு ஊடகங்கள் சகட்டுமேனிக்கு காரணங்களை கற்பித்தன. பஞ்சாபில் வசித்து வந்த அவரது மாமா குடும்பத்தினர் மர்ம நபர்களின் தாக்குதலுக்கு ஆளாகி அவரது மாமா சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதால் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் போட்டியில் இருந்து விலகி இந்தியா திரும்பியதாக முதலில் செய்திகள் வெளியிட்ட ஊடகங்கள் அதன்பின் சுரேஷ் ரெய்னாவின் விலகல் குறித்து தாறு மாறான தகவல்களை வெளியிட்டன.
சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்துடன் தகராறு செய்ததாகவும், தோனிக்கு வழங்கப்பட்டது போன்ற தங்கும் அறை தனக்கு வழங்கப்படவில்லை என்றும், தோனி சமாதானம் செய்தும் ஈகோவால் ஐபிஎல் தொடரில் இருந்து சுரேஷ் ரெய்னா வெளியேறியதாகவும் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. கடந்த ஒரு வார காலமாக இதுபற்றி கருத்து எதுவும் சொல்லாத சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பதிவு மூலம் இந்த சர்ச்சைகளுக்கு முடிவு கட்டியுள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பதிவில் பஞ்சாபில் என் குடும்பத்துக்கு நடந்தது கொடுமையை விடவும் கொடுமை. என் மாமா கொலை செய்யப்பட்டுள்ளார். அத்தையின் சகோதரர்களும் படுகாயம் அடைந்துள்ளார்கள். உயிருக்கு போராடிய என் சகோதரன் நேற்றிரவு மரணமடைந்துள்ளார். என் அத்தை இன்னும் உயிருக்கு போராடி வருகிறார். அன்று இரவு என்ன நடந்தது யார்? இதை செய்தார்கள் ? என்று இன்று வரை தெரியவில்லை.
Till date we don’t know what exactly had happened that night & who did this. I request @PunjabPoliceInd to look into this matter. We at least deserve to know who did this heinous act to them. Those criminals should not be spared to commit more crimes. @capt_amarinder @CMOPb
— Suresh Raina🇮🇳 (@ImRaina) September 1, 2020
இந்த வழக்கை முக்கியத்துவம் கொடுத்து கவனிக்குமாறு பஞ்சாப் காவல் துறையிடம் கோரிக்கை வைக்கிறேன். இந்தக் கொடுமையான செய்த செயலை செய்தவர்கள் யார்?என்று எங்களுக்கு தெரியவேண்டும். அந்த குற்றவாளிகள் மேலும் குற்றங்கள் செய்யாதவாறு தடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த பதிவில் இருந்து தனது மாமா குடும்பம் அடையாளம் தெரியாத மனிதர்களால் தாக்கப்பட்டது தான் ஐபிஎல் தொடரில் இருந்து தான் வெளியேறியதற்கு காரணம் இன்று ஊடகங்களுக்கு உணர்த்தியுள்ளார்