புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்துள்ள நரியன்புதுப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த அன்பரசன் (52), இதே பள்ளியில் தலைமை ஆசிரியராக ஞானசேகரன் (50) பணியாற்றிவருகிறார். கடந்த 2018 ம் ஆண்டு மார்ச் மாதம் 21 ம் தேதி இதே பள்ளியில் படிக்கும் சில மாணவிகளை அன்பரசன் பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரியவந்தது. இது குறித்து தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தும் அன்பரசன் மீது எந்த நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் வழக்கில் நேற்று நீதிபதி டாக்டர் சத்யா தீர்ப்பு அளித்துள்ளார்.இதில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஆசிரியர் அன்பரசனுக்கு போக்சோ சட்டத்தின் ஒரு பிரிவில் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், பாலியல் வன்கொடுமை தொடர்பாக 6 மாணவிகள் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் ஒரு பிரிவில் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ5 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் தலா 2 மாதம் சிறை தண்டனையும், மொத்தம் 49 ஆண்டுகள் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் தீர்ப்பளித்தார்.
இந்த பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியர் ஞானசேகரனுக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது, அபராத தொகை கட்டத் தவறினால் இரண்டு மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறியுள்ளார். ஆசிரியர்களால் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு ஏற்கனவே தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டதுடன், மேலும் ரூ.1½ லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க: http://சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு அதிகாரி… போலீசார் எடுத்த அதிரடி முடிவு..!