சென்னை உயர்நீதிமன்றத்தில் அகில இந்திய தனியார் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார். அவரது மனுவில் இந்த கொரோனா நோய்த் தொற்று காலத்தில் நாடு முழுவதிலும் தனியார் பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதால் வாழ்வாதாரத்திற்காக டீ கடை நடத்துவது, பூ விற்பது போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க எந்த அமைப்பும் இதுவரை இல்லை. தனியார் பள்ளி கல்லூரி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு எந்த கட்டணச் சலுகையும் வழங்கப்படுவதில்லை.
மேலும் படிக்க : http://இன்று முதல் ஜியோவின் அதிரடி ஆரம்பம்… 30 நாட்களுக்கு இலவசம்… வெறும் 399-ல் குறைவில்லாத டேட்டா…!!
மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணங்கள், ஆசிரியர்களுக்கான ஊதியங்கள் கண்காணிக்கப் படாததால் பெருவாரியான லாபம் பள்ளி மற்றும் கல்லூரி அறங்காவலர் கைகளுக்கு செல்கிறது. எனவே தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டண வசூல் மற்றும் ஆசிரியர்களுக்கான ஊதியங்கள் வழங்கும் நடைமுறையை அரசே ஏற்க வேண்டும்.
மேலும் தனியார் கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் மூலம் தணிக்கை செய்து கட்டண விகிதங்களை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு இது தொடர்பாக நான்கு வாரங்களில் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.