கொரோனா தொற்றுக்கு முன் களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் மட்டுமின்றி, எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அமைச்சர்கள் ஆகியோரும் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது திமுக மற்றும் அதிமுக தலைமையை கவலையடையச் செய்துள்ளது. தற்போது எம்.பி. கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்திற்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள வீட்டில் கார்த்தி சிதம்பரம் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தனக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் பாசிட்டீவ் என வந்துள்ளதாகவும், லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால் மருத்துவர்களின் ஆலோசனையின் படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக தன்னை சந்தித்த அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.
I have just tested positive for #Covid. My symptoms are mild and as per medical advice I am under home quarantine. I would urge all those who have recently been in contact with me to follow medical protocol.
— Karti P Chidambaram (@KartiPC) August 3, 2020