இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்து வரும் கொரோனா தொற்றுக்கு பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பலரும் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை மோசமான நிலைக்கு சென்று, தற்போது நல்ல நிலைக்கு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. நாடெங்கும் தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்தும் கொரோனா கட்டுப்படுத்த முடியவில்லை இதைதொடர்ந்து கொரோனா தொற்றை கட்டுபடுத்த அரசு பல்வேறு முயற்சிகளை செய்துவருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசும் மாநில அரசும் அறிவித்துள்ளது
இந்நிலையில் “அன்பே ஆருயிரே” படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மீரா சோப்ரா இவர் அன்பே ஆருயிரே படத்தை தொடர்ந்து லீ, காளை, ஜாம்பவான் போன்ற பல தமிழ்ப் படங்களில் நடித்திருக்கும் இவர் இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். மீரா சோப்ரா கொரோனா மரணங்கள் பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு குறித்து.குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் கூறியது.
One of my friend lost both his parents to covid few days bak. First mom and yesterday dad. Iam shocked and sad. #COVID19 is killing people. Things are opening but its not safe. Go out, meet people only if its required. Plz Wear masks!!
— meera chopra (@MeerraChopra) August 30, 2020
கடந்த வாரம் தனது நண்பர் ஒருவர் கொரோனா தொற்றால் முதலில் தாயை இழந்ததாகவும் இதைதொடர்ந்து நேற்று தன் தந்தையையும் இழந்து தவித்து வருவதாக வருத்துடன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று மக்களைக் கொன்று குவிக்கிறது.
தற்போது அரசு பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது பாதுகாப்பானது அல்ல. பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பாதுகாப்பாக வெளியே செல்லவும், தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர கூடாது எனவும். மாஸ்க் அணிந்து கொள்ளுமாறும் கூறியுள்ளார்.