தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணத்தால் கடந்த மார்ச் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதன் காரணத்தால் அனைத்து விதமான அரசு மற்றும் தனியார் துறை அலுவலங்கள் மூடப்பட்டிருந்தது. போக்குவரத்து மற்றும் அனைத்து விதமான நிறுவனங்களும் செயல்படாமல் இருந்தது. இதனால் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் தொற்றின் பரவல் குறைந்து வருவதால் அரசானது ஊரடங்கு தளர்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களை கொண்டு செயல்படுகிறது. இதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அனைத்து அலுவலகங்களும் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம் என்ற தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் தனியார் அலுவலகங்கள் முழு ஊழியர்களுடன் செயல்படத் தொடங்கியுள்ளது. அரசு அலுவலகங்களுக்கு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகள் விடுமுறை நாட்களாக இருந்து வருகிறது. ஆனால் தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள் வரும் டிசம்பர் மாதம் வரையில் அனைத்து சனிக்கிழமைகளும் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.