கடும் குளிரில் ஆம்புலன்ஸ் இல்லாத சூழலில் ராணுவ வாகனத்தில் சென்ற கர்ப்பிணி, குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடும் குளிர்காலம் நிலவி வருகிறது. இந்நிலையில் காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் நரிகூட் பகுதியில் வசித்து வந்த கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது. அந்த ஊரில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாத நிலையில் உடணிருந்த சுகாதார பணியாளர் சாதியா பேகம் என்பவர், உடனடியாக இந்திய ராணுவத்தின் கலரூஸ் கம்பெனி படை பிரிவுக்கு போன் செய்துள்ளார். அவர்களின் நிலைமை புரிந்த ராணுவமும், வாகனம் ஒன்றை நரிகூட் பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவர்களுடன் மருத்துவ குழுவும் சென்றுள்ளனர். நரிகூட்டில் இருந்து சுகாதார பணியாளரையும் உடன் அழைத்து கொண்டு வாகனத்தில் கர்ப்பிணியை ஏற்றி சென்றுள்ளனர்.
இந்நிலையில் வழியில் அந்த பெண்ணின் உடல் நிலை மோசமடைந்துள்ளது. இதனால் அடர்பனி மற்றம் கடும் பனிப்பொழிவுக்கு இடையே சாலையோரம் வண்டியை நிறுத்தும்படி பேகம் கூறியுள்ளார். வேறு வழியின்றி மருத்துவ குழு உதவியுடன் ராணுவ வாகனத்தில் பெண்ணுக்கு பேகம் பிரசவம் பார்த்துள்ளார். இதன்பின் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமுடன் உள்ளனர். இவர்களை கலரூஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சரியான தருணத்தில் நம்பிக்கையுடன் செயல்பட்ட சுகாதார பணியாளருக்கு ராணுவ கம்பெனி படை பிரிவின் தளபதி பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மேலும் கர்ப்பிணியின் கணவர் குலாம் ரபானியும் தனது நன்றியை தெரிவித்துள்ளார். தாயையும், சேயையும் காப்பாற்றிய சுகாதரா பணியாளரை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
மேலும் படிக்க:http://அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததால் 7 பேர் காயம்… மாடு குறுக்கே வந்ததால் பரபரபப்பு…!!