சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில் வசிப்பவர் விஸ்வநாதன். இவருக்கும் திவ்ய பாரதி என்பவருக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்த நிலையில் நேற்று இரவு வீட்டின் முதல் தளத்திற்குச் சென்ற திவ்ய பாரதி நீண்ட நேரமாக கீழே வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் முதல் தளத்திற்குச் சென்று கதவை தட்டி பார்த்தும் திறக்காததால் அரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து அங்கு வந்த போலீசார், கதவை உடைத்து பார்த்தபோது புடவையால் தூக்கிட்டு இறந்த நிலையில் இருந்துள்ளார்.
திவ்ய பாரதியின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் விஸ்வநாதனுக்கு 33 வயது திவ்ய பாரதிக்கு (23) என்பதால் மன உளைச்சலுக்கு இருந்து விஸ்வநாதனுடன் சேர்ந்து வாழாமல் அவர் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து விஸ்வநாதன் விவாகரத்து கேட்டு அவருக்கு நோட்டீஸ் கொடுத்ததால் பிரச்னை ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.